×

மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 

சென்னை: மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இன்று 270 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9-ல் 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு நாளை, நாளை மறுநாள் 70 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Chennai ,State Transport Corporation ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் பேருந்துகள் பழுதுபார்ப்பு..!!